
ஐரோப்பா நாடான கிரீன்லாந்து நாட்டில் ஒரே நாளில் பல பில்லியன் டன் பனி உருகியிருப்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிரீன்லாந்தில் நேற்று 22°C வெப்பம் பதிவானதால் ஒரே நாளில் 11 பில்லியன் டன் அளவிலான பனிக்கட்டிகள் உருகியுள்ளது. 197 பில்லியன் டன் பனி இருக்கும் கிரீன்லாந்து பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 பில்லியன் டன் பனி உருகுவது வழக்கம்.
வழக்கமாக, கோடையின் போது, 50 சதவீதம் வரை கிரீன்லாந்தின் மேற்பரப்பில் பனி உருகுவதும், பின்னர் ஆர்க்டிக் குளிர்காலம் வரும்போது அது மறுபடியும் உறையும் நிகழ்வும் வழக்கமாக நடந்து வருவதாகும்.
ஐரோப்பா நாடான கிரீன்லாந்து நாட்டில் ஒரே நாளில் பல பில்லியன் டன் பனி உருகியிருப்பது சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிரீன்லாந்தில் நேற்று 22°C வெப்பம் பதிவானதால் ஒரே நாளில் 11 பில்லியன் டன் அளவிலான பனிக்கட்டிகள் உருகியுள்ளது. 197 பில்லியன் டன் பனி இருக்கும் கிரீன்லாந்து பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 60 முதல் 70 பில்லியன் டன் பனி உருகுவது வழக்கம்.
வழக்கமாக, கோடையின் போது, 50 சதவீதம் வரை கிரீன்லாந்தின் மேற்பரப்பில் பனி உருகுவதும், பின்னர் ஆர்க்டிக் குளிர்காலம் வரும்போது அது மறுபடியும் உறையும் நிகழ்வும் வழக்கமாக நடந்து வருவதாகும்.
இதேபோன்று மிகப்பெரிய பனி உருகல் கடந்த 1950ம் ஆண்டு நிகழ்ந்ததாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒரே நாளில் 11 பில்லியன் டன் பனி உருகியது கடல் நீர்மட்டத்தை அதிகரிக்கச் செய்யுமா என்பது குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.