
மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக ஜனாதிபதியால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களிடம் கேட்ட போது,
மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக நியமிக்கப்பட்டதாக அறிந்தேன். ஆனாலும் நான் அதனை இதுவரை ஏற்கவில்லை எனத் தெரிவித்தார்.
Facebook Notice for EU!
You need to login to view and post FB Comments!